தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டில் தமிழும் சம்ஸ்க்ருதமும்: இணைய வழி கருத்தரங்கு!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

samskritha bharathi speech - 2026

தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தமிழும் சமஸ்கிருதமும் என்ற தலைப்பில் சம்ஸ்க்ருத பாரதி (வட தமிழகம்) அமைப்பின் சார்பில் 2 நாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறுகிறது. மார்ச் 6 மற்றும் 7 இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த நிகழ்ச்சி யூடியூப் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, பூஜ்யஸ்ரீ ஓங்காரநந்த சுவாமிகள், சம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர் ஆர் ராமச்சந்திரன், பேராசிரியர் கோபபந்து மிஸ்ரா (சம்ஸ்க்ருத பாரதி தலைவர்) ஆகியோர் உரையாற்றுகின்றனர்

இன்றைய நிகழ்வில் விசார தரங்கிணி என்ற கருத்தரங்கு சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. இதில் சிறப்புரை நிகழ்த்துகிறார் சாலமன் பாப்பையா. இன்றைய முதல் அமர்வில் தமிழ்த் துறை பேராசிரியர் ஜெகநாதன் உரையாற்றுகிறார். இரண்டாவது அமர்வில் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் சம்ஸ்க்ருத துறை சார்ந்த டாக்டர் கணேஷ் மற்றும் மூன்றாவது அமர்வில் சமஸ்கிருத துறையை சேர்ந்த டாக்டர் எஸ் ஜெகதீசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

7ஆம் தேதி நாளை விசார தரங்கினி கருத்தரங்கு சிறப்பு மலர் 2 வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் முதல் அமர்வில் டாக்டர் சி சதானந்தன் (டி ஜி வைஷ்ணவா கல்லூரியின் தமிழ்த்துறை) உரையாற்றுகிறார். இரண்டாவது அமர்வில் ராணிமேரி கல்லூரியின் தமிழ்த்துறை டாக்டர் அனுராதா உரையாற்றுகிறார் மூன்றாவது அமர்வில் ஜகத்குரு க்ருபாளு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர் ராமரத்தினம் உரையாற்றுகிறார்

மேலும் இன்றைய சிறப்பாக உச்சநீதிமன்ற நீதிபதி வி ராமசுப்பிரமணியம் சிறப்புரை நிகழ்த்துகிறார் இந்த சம்ஸ்கிருத நிகழ்ச்சியில் அனைத்திந்திய சமஸ்கிருத பாரதி தலைவரும் ஸ்ரீ சோமநாத சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் கோபபந்து மிஸ்ரா சம்ஸ்கிருதத்தில் உரை நிகழ்த்துகிறார்.

Related articles

Recent articles

spot_img