யாதுமாகி நின்றாய் காளி: சிங்கப்பூரில் சொற்பொழிவு

சிங்கப்பூர் டெப்போ ரோடு அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று மாலை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள்”யாதுமாகி நின்றாய் காளி..” என்ற தலைப்பில் சுமார் ஒன்றேகால் மணி நேரம் அருமையான சொற்பொழிவினை வழங்கினார் .

கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்கள் கீழாம்பூர் அவர்களைப்பற்றி அறிமுகம் செய்து வைக்க மாலை 7.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 8.45 வரை இனிது நிகழ்ந்தது .

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் காஞ்சி மகாபெரியவர் அவர்களை தாம் கண்ட பேட்டியில் இருந்து காளி குறித்த தகவல் களை சொல்ல ஆரம்பித்தவர்

பத்திரிகையாளர்கள் என்றால் திருநெல்வேலி என்றும் எழுத்தாளர்கள் என்றால் கும்பகோணம் என்றும் ஆதாரம் காட்டி பேசியபோது அரங்கு கைதட்டல்களால் அதிர்ந்ததற்கு காரணம் ஆரம்பத்திலேயே அறிமுக உரை நிகழ்த்திய கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்களும் கீழாம்பூர் அவர்களும் நெல்லைச்சீமை என்பதால் தான்.

பத்ரகாளி என்று நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு இன்றைய அர்தத்ததை கேட்ட பெண்கள் எல்லோரும் இனி தங்களை யாராவது அப்படி சொன்னால் சந்தோஷப்படுவார்கள்.

காளியின் அருள் இருந்தால் யார் வேண்டுமானாலும் காளிதாசன் மாதிரி புகழ் பெறலாம் என்றும் எல்லோரையும் காக்கும் கடவுள் காளி என்பதையும் பேசிய விதம் அருமை.

வில்லுப்பாட்டு என்று நாம் சொல்லும் வில்லிசை தோன்றிய வரலாற்றை சொன்னது வந்திருந்தோர் இதுவரை கேட்டிராத புதிய தகவல் .

இத்தகைய அருமையான பேச்சை நாம் தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் எண்ணினால் கவலை வேண்டாம் இன்று மாலை மூன்று மணியளவில் பூன்கெங் எம் ஆர் டி அருகில் உள்ள காலாங் கம்யூனிட்டி கிளப்பில் கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்கள் ஏற்பாட்டில் “கம்பன் எனும் பத்திரிக்கையாளன்” என்ற தலைப்பில் கீழாம்பூர் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற உள்ளது வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெறலாம் !

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப திண்ணப்பன் /முனைவர் இரத்தின வெங்கடேசன் /தினமலர் வெ.புருஷோத்தமன்/மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன்/தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம்/கவிஞர் ஏ.கே.வரதராஜன் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தது மேலும் சிறப்பு.

செய்தி: கீழை. ஏ. கதிர்வேல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories