பால்மரக் காட்டினிலே…

rubber trees in achankoil - 2026

நான் பயின்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவில் நாவல் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. அது, அகிலன் எழுதிய “பால்மரக் காட்டினிலே” … வகுப்பில் வாசித்துக் காட்டி விளக்கினார் தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் சார்.

கடனே என்று படித்து வைத்தேன். பின்னாளில் கலைமகள் பத்ரிகை அலுவலகத்தில் பணியில் இருந்த போதுதான், கி.வா.ஜ.,வுக்கும் அகிலனுக்கும் இருந்த தொடர்பு, மலேசியா செல்லும் முன் அகிலனிடம் ஒரு நாவலுடன் வரவும் என கிவாஜ., விடுத்த வேண்டுகோளின் படி, அவர் “பால்மரக் காட்டினிலே” எழுதிய விதம்… இவற்றையெல்லாம் அறிய நேர்ந்தது.

மலேசிய ரப்பர் தோட்டங்களில் கூலித் தொழிலாளராகச் சென்ற தமிழரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டதுதான் இந்த நாவல்…

அதுபோல்… நெல்லை பத்தமடையில் தோன்றி ஹிமாலயத்தின் ரிஷிகேசத்தில் கரைந்த ஜோதி சுவாமி சிவானந்தர், ஒரு மருத்துவராக மலேசியாவில் இதே ரப்பர் காடுகளில் பெரும் சிரமங்களைச் சந்தித்த தமிழர்களுக்கு எத்தகைய உணர்வுபூர்வமான உதவிகளைச் செய்தார் என்பதைப் படித்த போது, கண்களில் நீர் பெருக்கெடுத்தது..!

கடந்த ஒன்றாம் தேதி, என் ஊர் செங்கோட்டைக்கு வந்திருந்த கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சார், பதிப்பாளர் பி.டி.ராஜன் ஆகியோரை செங்கோட்டையில் இருந்து தென்மலை, குளத்துப்புழா, நெடுமங்காடு வழியாக காரில் திருவனந்தபுரத்துக்கு மலைப்பாதையில் அழைத்துச் சென்றேன். ஆரியங்காவு கடந்து விட்டால், அருமையான சாலை. அதுவரை பொறுமை மிகத் தேவை. அப்போது மலையில் இருபுறமும் இருந்த ரப்பர் மரங்களைப் பார்த்து ரசித்தபடியே மேற்படி “பால்மரக் காட்டினிலே” படித்த அனுபவத்தை கீழாம்பூர் சாரிடம் சொல்லிக் கொண்டே வந்தேன். கலைமகளில் நாவலாக வந்த பின்னணியை அவர் சொன்னார்.

தற்போது, அச்சன்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு. மதியம் 12 மணி உச்சி தரிசனம் முடிந்து, அருகே இருந்த ஆற்றில் கொஞ்சம் கால் நனைத்து வருவோமே என்று கீழே இறங்கினேன். ஆற்றை ஒட்டி அமைந்திருந்த ரப்பர் மரங்களைக் கண்டதும் இந்த நினைவுகள் தான் ஒட்டிக் கொண்டிருந்தது. ரப்பர் பால் சொட்டுச் சொட்டாக அந்தக் கொட்டாங்குச்சியில் சேர்ந்து கொண்டிருந்தது! இது ரப்பராகி வந்தாலும் அதன் நினைவுகளை அழிப்பது சிரமம் தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories