கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!

Kalam Kalam Salaam Salaam Tomorrow is Indias power - 2026

கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ – இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!

நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். நினைவு மண்டபத்தின் திறப்புவிழாவை ஒட்டி அப்துல் கலாமுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகக் கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.

பாடலுக்கான குறுந்தகடு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாடலை வெளியிட்டார். கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் குறுந்தகட்டைப் பெற்றுக்கொண்டனர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்துல் கலாமின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

இந்தப் பாடலின் வரிகள் வருமாறு:–
தேசிய கொடியும் அசைந்து சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்.
தேசம் முழுக்க எழுந்து சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்,
கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்.
காலம் கடந்து காலம் சொல்லும் கலாம் கலாம், சலாம் சலாம்.
நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் நிச்சயம் நற்குணம் உண்டாகும்.
நற்குணம் நிறைந்த உறவுகளாலே ஒற்றுமை என்பது உருவாகும்.
ஒற்றுமை மிகுந்த நாட்டில் தானே ஒழுக்கம் என்பது உருவாகும்.
ஒழுக்கம் காக்கும் நாடுகளாலே உலக அமைதி நிலையாகும்.
வள்ளுவர் போலே வாய்மை வகுத்த நல்லவர் நீங்கள் என்பதனாலே
கலாம் கலாம், சலாம் சலாம்.

பாதி புத்தனும் பாதி காந்தியும், பகிர்ந்து படைத்தது நீயா?.
பாதி நியூட்டன் பாதி ஐன்ஸ்டீன் கலந்து செய்ததன் கையா?.
இந்திய நாட்டை விண்வெளி மேலே ஏற்றி வைத்ததும் பொய்யா?.
நாளை இந்தியா வல்லரசாக நாளும் உழைத்தீர் அய்யா.
தூங்கிக்காண்பது கனவே அல்ல தூங்க விடாததே கனவு என்றீரே,
கலாம் கலாம், சலாம் சலாம்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

என்று அந்தப் பாடல் முடிகிறது. இந்தப் பாடலை நினைவு மண்டபத் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டுக்குரலில் பாட உள்ளனர்.

அந்தப் பாடல்: கேட்டு மகிழுங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories