சிறு வயது முதல் எனக்குள்தான் எத்தனை எத்தனை ஆசைகள்?! எத்தனை ரசனைகள்? எத்தனை ஏக்கங்கள்? எல்லாம் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் ஒடுங்கியே கிடந்தன… என்னவளாய் உன்னைக் கண்டு ஏக்கத்தை வெளியில் விட்டேன்! சேமிப்புக் கிடங்கில் அடங்கிக் கிடந்த ஆசை அம்புகள் ஒவ்வொன்றாய் வெளியில் சீறிப் பாய்கின்றன! பார் பெண்ணே…! பார்வையில் பட்ட பின்னே பாரங்கள் பட்டுப் போச்சு! உன் மீதான என் அன்பு… நான் கண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை விட உயரமானதுதான்! ஏறுவது எவ்வளவு கடினம்! எனக்கும் தெரியும்! ஆனால் அன்பே… உச்சிக்குச் சென்ற பின்தான் நான் ஏறிவந்த பாதையின் அழகு எனக்குத் தெரிகிறது! உன் காதலுக்காய் நான் கடந்து வந்த பாதையைப் போல்!
காதல் கடந்து வந்த பாதை!
Popular Categories


