உன்னாலே பிடிக்கிறது ~ வாழ்க்கை!

Published:

painting அனுபவம் ஆயிரமல்ல.. ஒன்றே ஒன்றுதான்! உனைக் காணும் முன்… வாழ்க்கைப் பாதையின் வசந்தச் சுவடுகள்… பார்வையில் பட்டபின்… காதல் பாதையில் கசந்தச் சுவடுகள்… என் மீதான உன் அச்சம்! நன்றாய்த் தெரிகிறது! எனைக் கண்டால் ஏதோ வெளிப்பூச்சுக்காய் புன்னகைத்து வைக்கிறாய்! உன் மீதான என் நேசம்… நன்றாய்த் தெரிந்து கொள்! உனைக் காணாது இருக்கும் போதும் நான் உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிரித்துத் தொலைக்கிறேன்! நான் ஒருவனே..! ~ நம்பிக்கையின்றி வாழ்ந்திருந்தேன்- இலக்கு இதுவெனத் தெரியாமல்! உலகு பிடிக்கவில்லை… உற்றாரும் ஊரும்… எனக்காய் இல்லை! தனி ஒருவனாய்… முடங்கிக் கிடந்தேன் ! உனைக் கண்ட பின்னே… உனக்காகவே வாழத் தொடங்கினேன்! எனக்காக நீ இருக்கிறாய் என்ற எண்ணம் என்னுள்! இப்போது – உலகு பிடிக்கிறது; உலகில் வாழப் பிடிக்கிறது; உன்னால் வாழ்க்கை பிடிக்கிறது; இப்போது நீயே என் உலகமாய்..! இதோ… அயராமல் சுற்றுகிறேன்!

Related articles

Recent articles

spot_img