கலைகளின் தாய் அருகேயிருந்து அருள் புரிகின்றாள்… ஆனால் நீ … கேட்டுப் பெற்றதென்னவோ நடிப்புக் கலை மட்டுமே! நடிப்பென்றால் சிவாஜி கணேசன்! சிவாஜி என்றால் கட்டபொம்மன்! நீ என்ன மாமனா மச்சானா மானங்கெட்டவனே…! எனும் போது எத்தனை கைத்தட்டல்கள்! நீயும் கட்டபொம்மன் ஆனாய்… ஒருநாள்! உன் மீது நான் வைத்த பாசத்தை மோசமாக்கினாய்! என் கனிவுப் பார்வையை இழிவுபடுத்தினாய்! உன்னை நான் உரிமை கொண்டாட… உனக்குரியவள் நானில்லை என்றாய்! போகட்டும்..! ஆனால்… நான் என்ன உனக்கு மாமன் மகளா? இல்லையெனில்… உனக்கெனப் பிறந்தவளா…? ஏனிந்த ஆதிக்கம் என் மீது? நான்… எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ செல்லப் போகிறேன்… – என்றாய்! உன் ஒவ்வொரு சொல்லிலும் என் கன்னத்தில் எத்தனை கைத்தட்டல்கள்..? உறவாய் ஆன பின்னே… உடன் பிறந்த உறவுகளை வெட்டிவிடும் பெண்ணைப் பார்த்திருக்கிறேன்…! உரிமையாய்… உறவென ஆகத் துடிப்பவனையே வெட்டிவிட்டு நீ வேடிக்கை பார்க்கின்றாயே!
Published:

