ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை!

Published:

malar_manam11 உன் ஒற்றைச் சொல் வாய்மொழிக்காய்… எத்தனை நாள் தவம் கிடந்தேன்! விருப்பத்தின் இருப்பைக் காட்ட விழியிரண்டால் ஊடுருவிப் பார்த்தேன்! உன்னைக் காணாத நாட்களிலும் என் நெஞ்சத்தில் நீ அமர்ந்து மஞ்சத்தின் ஏக்கம் விதைத்தாய்! இப்படியே நகர்ந்தன நாட்கள்! ஆனால்… இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி? கிட்டாதாயின் வெட்டென மற! – ஔவைப் பாட்டியின் அறிவுரை! கிட்டுவதாயின் சட்டென நினை! – மனசில் தோன்றிய முகவுரை! நீ… கிட்டுவாயா? கிட்டாமற் போவாயா? உன்னை உடனே மறக்கவா? இல்லை… நினைவிலேயே கொள்ளவா? இதையேனும் வாய் திறந்து சொல்வாயோ? இதமாகவோ; பதமாகவோ! இல்லை… இதயத்தில் இரும்பைக் காய்ச்சி உருக்கியேனும்… ஒரு வார்த்தை! ஒரே ஒரு வார்த்தை!

Related articles

Recent articles

spot_img