ச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா? திமுக.,வின் ‘கோர’ முகம்!

republictv scene - 2026

செய்திகள் மூலம் தொடர் பொய்களைப் பரப்பி வரும் திமுக., அதற்காகவே தொடக்க காலத்தில் பத்திரிகை, நாடகம், சினிமா ஆகியவற்றை நாடியது. சினிமாவில் உள்ள வசனங்கள் மூலமும், நாயகர்களின் பேச்சுகள் மூலமுமே தங்களை உத்தமர்கள் போல் காட்டி வளர்ந்த திமுக.,வின் தந்திரம் இப்போது சாயம் போய் விட்டிருக்கிறது.

பேச்சு சுதந்திரம் என்று கூவிக் கொண்டிருந்தவர்கள், இப்போது  கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

தொடக்க காலத்தில் சுமங்கலி கேபிள் விஷன் மூலம், தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி மூலம் சென்றடைந்தவர்கள், பின்னர் சன் டிவி., கலைஞர் டிவி என கட்சியின் பிரசாரதளத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள்.

எஸ்சிவி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் மூலம், தாங்கள் நினைத்த சேனலை மட்டுமே வாடிக்கையாளர்களிடம் சேர்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார்கள். ஜெயலலிதா வீட்டு செருப்புகளையும் புடவைகளையும் மீண்டும் மீண்டும் காட்டியே 96 தேர்தலில் வெற்றி பெற்றது திமுக.,

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இப்போதும் அதே பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கும் திமுக., தற்போது சமூக ஊடகத் தளங்களின் காலத்தில் சிக்கித் திணறி வருகிறது. அந்தப் பொய்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் வகையில் சோஷியல் மீடியாக்கள் விழிப்புடன் இருந்து வருகின்றன.

தற்போது, காஷ்மீர் விவகாரத்தில், தேச விரோதக் கருத்துகளுடன் உலவும் திமுக.,வுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. அதற்குக் காரணம், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன்.

சரவணன் ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரச்னையை தவறாக கையாண்டதால் ரிபப்ளிக் டிவி சரவணனை வெளுத்து வாங்கியது.

அதற்கு பழிவாங்கும் விதமாக சன் டைரக்ட் டில் ரிபப்ளிக் டிவி நீக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, இவ்வளவுதான் இவனுக கருத்து சுதந்திரம் எல்லாம்!! .. என்று கேலி செய்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்!

அரசுப் பணத்தை எடுத்து செலவு செய்து, அனைத்து வீடுகளுக்கும் இலவச டிவி., கொடுத்து, அதில் ஒரு கமிஷனையும் பார்த்து, தன் குடும்ப கேபிளான எஸ்.சி.வி., மூலம் வீட்டுக்கு வீடு கலெக்சனையும் பார்த்தவர் கருணாநிதி என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனதில் கொண்டு தான் ஜெயலலிதா அரசு கேபிளுக்கு விதை போட்டார். ஒரு கட்சியின் கையில் ஊடகமும், கேபிள் நெட்வொர்கும் இருந்தால் என்ன ஆகும் என்பது இந்த விவகாரத்தில் வெளித் தெரிந்திருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories