சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!

chennai richie street - 2026

சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன அதிபர் சென்னை மற்றும் தொடர்ந்து மாமல்லபுரம் செல்லவுள்ள நிலையில், சென்னை ரிச்சி சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

சீன அதிபர் – பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, பெண் ஒருவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். காசினோ திரையரங்கு அருகே உள்ள சிக்னல் அருகே இரு சக்கர வாகனத்தில் தன் மகனுடன் வந்தார் அந்தப் பெண். அப்போது அவர் மீது அரிவாளால் வெட்டித் தாக்க முயற்சி செய்துள்ளது அந்த கும்பல்.

உடனே அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஒரு ஆட்டோவில் ஏறி, அங்கிருந்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது, அந்தப் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். ஆறு பேர் கொண்ட கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது.

குண்டு வீச்சில் ஆட்டோ சிறிது சேதமடைந்துள்ளது. ரிச்சி தெரு சிக்னல் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் ஒரு வழக்கறிஞர் என்றும், ரவுடி ஒருவரின் மனைவி என்றும் கூறப் படுகிறது. முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இதை அடுத்து காயம் அடைந்த பெண் உடனடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். சம்பவம் நடந்த பகுதி மிகவும் பரபரப்பான பகுதி என்பதால், தற்போதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது…

இந்நிலையில், தப்பிச் சென்ற 6 பேரில் இருவர் பிடிபட்டுனர் என்றும், அவர்களின் விவரங்கள் பின்னர் வெளியிடப் படும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories