சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!

chennai richie street - 2026

சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன அதிபர் சென்னை மற்றும் தொடர்ந்து மாமல்லபுரம் செல்லவுள்ள நிலையில், சென்னை ரிச்சி சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

சீன அதிபர் – பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, பெண் ஒருவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். காசினோ திரையரங்கு அருகே உள்ள சிக்னல் அருகே இரு சக்கர வாகனத்தில் தன் மகனுடன் வந்தார் அந்தப் பெண். அப்போது அவர் மீது அரிவாளால் வெட்டித் தாக்க முயற்சி செய்துள்ளது அந்த கும்பல்.

உடனே அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஒரு ஆட்டோவில் ஏறி, அங்கிருந்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அப்போது, அந்தப் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். ஆறு பேர் கொண்ட கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது.

குண்டு வீச்சில் ஆட்டோ சிறிது சேதமடைந்துள்ளது. ரிச்சி தெரு சிக்னல் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் ஒரு வழக்கறிஞர் என்றும், ரவுடி ஒருவரின் மனைவி என்றும் கூறப் படுகிறது. முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இதை அடுத்து காயம் அடைந்த பெண் உடனடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். சம்பவம் நடந்த பகுதி மிகவும் பரபரப்பான பகுதி என்பதால், தற்போதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது…

இந்நிலையில், தப்பிச் சென்ற 6 பேரில் இருவர் பிடிபட்டுனர் என்றும், அவர்களின் விவரங்கள் பின்னர் வெளியிடப் படும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories