December 5, 2025, 11:17 PM
26.6 C
Chennai

பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

curralam - 2025

குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பாலின் ரோஸ் ஜெமிமா (வயது47). இவர் அந்த பகுதியில் ஏழை மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி நடத்தி வருகிறார். அந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த குத்தா லிங்கம் மகள் மணிமேகலை (14), அம்பை வேலாயுதம் நகர் வில்லியம் மகள் மரிய லிவ்யா (15), கடையநல்லூரை சேர்ந்த மணி மகள் அபிநயா (16) ஆகியோரும் அங்கு தங்கியிருந்தனர். அவர்கள் 3 பேர் மற்றும் விடுதி நடத்தி வந்த கோவிந்தன் மகள் ஜெஸ்பா எஸ்தர் (12) ஆகிய 4 பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

அபிநயாவும், மரிய லிவ்யாவும் 11-ம் வகுப்பு படித்து வந்தனர். மணி மேகலை 10-ம் வகுப்பும், ஜெஸ்பா எஸ்தர் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த 4 மாணவிகளும் நன்றாக படிக்காமல் அடிக்கடி விளையாடி வந்ததால், விடுதி கண்காணிப்பாளர் பாலின் ரோஸ் ஜெமிமா மாணவிகளை கண்டித்துள்ளார். மேலும் தனது மகள் ஜெஸ்பா எஸ்தருடன் பழக கூடாது என்றும் சத்தம் போட்டுள்ளார்.

இது தோழிகளாக பழகிய 4 மாணவிகளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த 4 மாணவிகளும் ஒன்றாக விடுதியை விட்டு வெளியேறி மாயமானார்கள். வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.

உடனடியாக விடுதி மேற்பார்வையாளர் பாலின் ரோஸ் ஜெமிமா அந்த பகுதியில் மாணவிகளை தேடினார். மாணவிகள் படிக்கும் பள்ளிக்கு சென்றும் அவர்களை தேடினார்கள்.

ஆனால் எங்கும் மாணவிகளை காணவில்லை. இதுகுறித்து பாலின் ரோஸ் ஜெமிமா குற்றாலம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவிகளையும் தேடி வருகிறார்கள்.

4 மாணவிகள் மாயமானது குறித்து தகவலறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்றுஅங்கு தங்கியுள்ள மற்ற மாணவிகள் மற்றும் ஊழியர்களிடம் காணாமல் போன மாணவிகள் குறித்து விசாரணை நடத்தினார்.

மாயமான 4 மாணவிகளின் புகைப்படங்களையும் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் மாயமான மாணவிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories