February 13, 2025, 11:58 AM
25.6 C
Chennai

அமைச்சர் வேலுமணியின் அசத்தல் போஸ்டர்! 50/5ன்னா இன்னா மேட்டரு?!

கோவையைக் கலக்கி வருகிறது  அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் 50/5 வித்தியாசமான போஸ்டர்!

கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இன்று ஒட்டப்பட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் 50/5 என்கிற அசத்தலான போஸ்டர்ஸ் வைரலாகி வருகிறது.

எங்கே திரும்பினாலும் நீல நிற போஸ்டரில் அமைச்சர் S.P.வேலுமணி தம்ஸ் அப் போஸ் கொடுக்கிறார். அண்மையில் மழைநீர் சேகரிப்பு வீடியோ ஒன்றில் டீசர்ட்டில் வித்தியாசமான கெட்டப்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பற்றிய பேசி அனைவரையும் அசத்திய அமைச்சர் வேலுமணி தற்போது இது வரை நாம் பார்க்காத  தம்ஸ் அப் போஸில் இடம் பெற்றுள்ள அந்த போஸ்டரில், கோவைக்காரர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் வகையில் ‘நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க’ என்ற வாசகம் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயலாக்கத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்ததால் இப்படி ஒரு விளம்பரமா என்று  கோவைக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.         

தமிழகத்தில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் செயலாக்கத்தில், கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்திருக்கிறது. தமிழக அளவில், திட்ட செயலாக்கத்தில், ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ‘ரேங்க்’ வழங்கப்படும்.

கோவை மாநகராட்சி மீண்டும் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உக்கடம் பெரிய குளத்தில் செய்யப்பட்டு வரும் பணிகள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அதனை நேரில் பார்வையிட, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஆகியோர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் ‘நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க’ என்று அமைச்சர் S.P.வேலுமணி இடம் பெற்ற போஸ்டர்கள்  கோவைக்காரர்கள் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அதற்கு காரணம் 50/5 என்று குறியீடு தவறாக இருப்பது தான். அது எதற்கு? என்ன அர்த்தம்? அமைச்சர் இடம் பெற்ற போஸ்டரில் இப்படி புரியாத மாதிரி 50/5 என்று குறிப்பிடப் பட்டது ஏன் என்று கோவைக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இது விளம்பர உத்திகளில் பயன்படுத்தும் டீசர் விளம்பரமாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த ஐம்பதுக்கு கீழ் ஐந்து குறியீட்டுக்கு விரைவில் விடை கிடைக்கும்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories