முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

bharathi raja - 2026

இளையரஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நடந்த கருத்து மோதலில் அதிக மன வருத்தத்தில் இருப்பது இளையராஜாவின் நண்பர் பாரதிராஜாதான். அவர் இந்த விஷயத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தும் பிரசாத் நிர்வாகம் இளையராஜாவை காலி செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பது பாரதிராஜாவை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அதோடு இத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருந்த இளையராஜாவிற்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் முழு மனதோடு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் பாரதிராஜாவின் மன வருத்தத்திற்கு காரணம். ஒரு காலத்தில் இளையராஜா யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லோரும் இந்த நேரத்தில் அவரை கைவிட்டு விட்டார்கள்!

ilaiyaraja - 2026

இசை அறிவை தேடிக்கொண்டதைப் போல மனிதர்களையும் ராஜா தேடிக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் பாரதிராஜா இருக்கிறார். அதே சமயம் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை. நண்பனுக்காக கடைசிவரை பார்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார் பாரதிராஜா.

தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக இளையராஜாவிற்கு ஸ்டுடியோ கட்ட பிரசாத் நிர்வாகத்திடம் கேட்பதற்கு பதிலாக அரசு சார்பாக ஒரு இடத்தை வாங்கிக்கொடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு தமிழக அரசை அணுக நினைத்தார் பாரதிராஜா. இதை ஒரு மனுவாக எடுத்துக்கொண்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தார்.

cm 1 - 2026

அவருக்கு ஒரு நேரமும் கொடுக்கப்பட்டது. கோட்டைக்கு பல முறை எம்.ஜி.ஆரையும்.ஜெயலலிதாவையும் சந்திக்க சென்றிருந்த பாரதிராஜா வெகு நாட்களுக்குப்பிறகு முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியை சந்திக்க போனார். அவர் போனதும் முதல்வர் பிஸியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அழைப்பு வரவில்லை. இதனால் டென்சன் ஆன பாரதிராஜா முதல்வரை சந்திக்காமலே கோட்டையிலிருந்து வேகமாக புறப்பட்டு வந்துவிட்டாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories