December 5, 2025, 2:05 PM
26.9 C
Chennai

முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

bharathi raja - 2025

இளையரஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நடந்த கருத்து மோதலில் அதிக மன வருத்தத்தில் இருப்பது இளையராஜாவின் நண்பர் பாரதிராஜாதான். அவர் இந்த விஷயத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தும் பிரசாத் நிர்வாகம் இளையராஜாவை காலி செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பது பாரதிராஜாவை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அதோடு இத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருந்த இளையராஜாவிற்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் முழு மனதோடு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் பாரதிராஜாவின் மன வருத்தத்திற்கு காரணம். ஒரு காலத்தில் இளையராஜா யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லோரும் இந்த நேரத்தில் அவரை கைவிட்டு விட்டார்கள்!

ilaiyaraja - 2025

இசை அறிவை தேடிக்கொண்டதைப் போல மனிதர்களையும் ராஜா தேடிக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் பாரதிராஜா இருக்கிறார். அதே சமயம் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை. நண்பனுக்காக கடைசிவரை பார்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார் பாரதிராஜா.

தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக இளையராஜாவிற்கு ஸ்டுடியோ கட்ட பிரசாத் நிர்வாகத்திடம் கேட்பதற்கு பதிலாக அரசு சார்பாக ஒரு இடத்தை வாங்கிக்கொடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு தமிழக அரசை அணுக நினைத்தார் பாரதிராஜா. இதை ஒரு மனுவாக எடுத்துக்கொண்டு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தார்.

cm 1 - 2025

அவருக்கு ஒரு நேரமும் கொடுக்கப்பட்டது. கோட்டைக்கு பல முறை எம்.ஜி.ஆரையும்.ஜெயலலிதாவையும் சந்திக்க சென்றிருந்த பாரதிராஜா வெகு நாட்களுக்குப்பிறகு முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியை சந்திக்க போனார். அவர் போனதும் முதல்வர் பிஸியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அழைப்பு வரவில்லை. இதனால் டென்சன் ஆன பாரதிராஜா முதல்வரை சந்திக்காமலே கோட்டையிலிருந்து வேகமாக புறப்பட்டு வந்துவிட்டாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories