2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர்! ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்!

sathyanarayana rajinikanth - 2026

“2020ல் ரஜினி கட்சி தொடங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார்; 2021ல் ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.

எப்போ வருவாரோ… எந்தன் கலி தீர என்று தெய்வத்தைப் பார்த்து பாட்டு பாடியவர்கள் பலரின் துன்பங்களை தெய்வம் தீர்த்து வைத்துள்ளது. அது போல் தமிழக அரசியலில் எப்போ வருவாரோ என்று காத்துக் காத்து கண்கள் பூத்து நின்று கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்! ஆனாலும் ரஜினி இதோ இதோ என்று போக்குக்காட்டி, சினிமாவில் நடிப்பதிலேயே மீண்டும் மீண்டும் தன் ஆர்வத்தைக் காட்டிவருகிறார்.

இதனால் அவரை கிண்டல் செய்வதும் கேலி செய்வதும் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி, கடந்த கால் நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், இதுவே என் கடைசித் தேர்தல்; இதிலாவது என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தேர்தல் தவறாமல் சொல்லி வந்தார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Rajinikanth Brother Satyanarayana Rao Gaikwad Confirms Politics - 2026

ரஜினியும் தனக்கு நெருக்கடி வந்து, கட்சி தொடங்க வேண்டிய சூழல் ஏற்படும் போதெல்லாம், கருணாநிதியைப் போய்ப் பார்த்து, அந்தப் பேச்சுக்கு ஒரு மங்களம் பாடி வைப்பார்!

கருணாநிதியின் வழியில், ஒவ்வொரு சினிமா வெளியில் வரும்போதும், அந்தப் படத்தின் சிறப்பு விளம்பர நிகழ்ச்சியில், இதுவே என் கடைசிப் படம் என்று சொல்லாமல் சொல்லி வைப்பார். ஆனால் அந்தப் படம் வெளிவந்து சூட்டோடு சூடு ஆறும் முன்னர், அடுத்த படம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு விடுவார்.

இந்த நிலையில், தற்போதைய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஒரு நம்பிக்கையினைக் கொடுத்திருக்கிறார். அவர் கூறியது போல் அற்புதம், அதிசயம் நிகழும்… என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியுள்ளார்.

2020ல் ரஜினி கட்சி தொடங்குவார். தொடர்ந்து தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்வார். மக்களை சந்திப்பார். பின்னர் 2021ல் ரஜினி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவார். அவர் கூறியது போல் அற்புதம், அதிசயம் நிகழும் .. என்று கூறியுள்ளார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories