இரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்!

Published:

manavi - 2026

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பி4 பெட்டியில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுருதி என்ற மாணவி பயணம் செய்தார். இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதேப்பெட்டியில் அவருக்கு அருகில் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் (வயது 40) என்பவரும் பயணம் செய்தார். இவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இரவில் முத்துகுமார் சுருதியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது முத்துகுமார் சுருதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் சுருதி திருச்சி ரெயில் நிலைய காவல்துறையிடம் புகார் கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தார்.

அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான முத்துகுமார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 31-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img