சென்னை அம்பத்தூரில் ஒரு வயதான பிச்சையெடுக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த ஒரு நேபாள நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர் .
சனிக்கிழமை இரவு சென்னை அம்பத்தூரில் சேலத்தை சேர்ந்த ஒரு 80 வயது மூதாட்டி பிச்சையெடுத்து பிளாட் பாரத்தில் வசித்து வந்தார்,
அந்த பாட்டியிடம் நேபாள நாட்டை சேர்ந்த யோகேந்திரன் என்ற 34 வயது நபர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார், அப்போது பாட்டி திடீரென விழித்துக்கொண்டபோது அந்த நபர் ஓடிவிட்டார்.
இதை அருகிலுள்ள ஒருவர் கவனித்து விட்டார் .உடனே அவர் யோகேந்திரனை பிடித்து அருகிலுள்ள காவலரிடம் ஒப்படைத்தார்.
காவலர்கள் பாட்டியிடம் அந்த நபரை பற்றி விசாரித்தபோது அவர் இந்த நேப்பாளிதான் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாரென கூறினார். உடனே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையிலடித்தனர்.