மன்னார்குடி வட்டாட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

Published:

rama gopalan - 2026

சென்னை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியரின் சட்டவிரோத, மக்கள் விரோத செயலைக் கண்டிக்கிறோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட மூவாநல்லூர் சாலை அருகில் அனைத்து இந்து சமுதாயத்திற்குமான சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. காலகாலமாக இந்துக்கள் பயன்படுத்தி வரும் இந்த இடத்திற்கு அருகில் உள்ள சுமார் 18000 சதுரடி விவசாய நிலத்தை தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முஸ்லீம்களுக்கான புதிய இடுகாடு அமைக்க விலைக்கு வாங்கி உள்ளனர். இதற்கு வட்டாட்சியிர் திருமதி. செல்வசுரபி, மக்கள் கருத்து கேட்காமல், மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை கேட்காமல், மன்னாகுடி நகராட்சியிடம் கருத்து கேட்காமல், சட்டவிரோதமாக, தன்னிச்சையாக அனுமதி வழங்கி உள்ளார்.
இதனை எதிர்த்து கடந்த 30.5.2017 அன்று மன்னார்குடியில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று தங்களது ஆட்சேபணையை பதிவு செய்துள்ளனர். இந்த அறப்போராட்டத்தில் அனைத்து கட்சியினரும், அனைத்து இந்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து, முறைகேடாக அனுமதி வழங்கிய உத்திரவை திரும்பப் பெற மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

முஸ்லீம் அமைப்பின் இந்த செயல்பாடு பொது அமைதியை கெடுப்பதாகவும்ம், வன்முறையை தூண்டுவதாகவும் இருக்கிறது என்பதை மாவட்ட காவல்துறை உணர்ந்து தகுந்த நடவடி்ககை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை தமிழக அரசை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img