மன்னார்குடி வட்டாட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

rama gopalan - 2026

சென்னை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியரின் சட்டவிரோத, மக்கள் விரோத செயலைக் கண்டிக்கிறோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட மூவாநல்லூர் சாலை அருகில் அனைத்து இந்து சமுதாயத்திற்குமான சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. காலகாலமாக இந்துக்கள் பயன்படுத்தி வரும் இந்த இடத்திற்கு அருகில் உள்ள சுமார் 18000 சதுரடி விவசாய நிலத்தை தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முஸ்லீம்களுக்கான புதிய இடுகாடு அமைக்க விலைக்கு வாங்கி உள்ளனர். இதற்கு வட்டாட்சியிர் திருமதி. செல்வசுரபி, மக்கள் கருத்து கேட்காமல், மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை கேட்காமல், மன்னாகுடி நகராட்சியிடம் கருத்து கேட்காமல், சட்டவிரோதமாக, தன்னிச்சையாக அனுமதி வழங்கி உள்ளார்.
இதனை எதிர்த்து கடந்த 30.5.2017 அன்று மன்னார்குடியில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று தங்களது ஆட்சேபணையை பதிவு செய்துள்ளனர். இந்த அறப்போராட்டத்தில் அனைத்து கட்சியினரும், அனைத்து இந்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து, முறைகேடாக அனுமதி வழங்கிய உத்திரவை திரும்பப் பெற மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

முஸ்லீம் அமைப்பின் இந்த செயல்பாடு பொது அமைதியை கெடுப்பதாகவும்ம், வன்முறையை தூண்டுவதாகவும் இருக்கிறது என்பதை மாவட்ட காவல்துறை உணர்ந்து தகுந்த நடவடி்ககை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை தமிழக அரசை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories