December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

மே 17-க்கு பிறகும் தமிழகத்தில் தொடர்கிறது ஊரடங்கு! கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசு முடிவு!

ig office chennai
ig office chennai

சென்னை…..மே 17-ம் தேதிக்கு பிறகும் இம்மாதம் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு தொடரும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தாலும் அம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஊரடங்கை முழுவதும் நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கினால் நோய்த் தொற்று அதிகமாகி விடும் என அரசுக்கு மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து நாளை தமிழக அரசு இதை முறைப்படி அறிிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennai air port
chennai air port

சென்னையில் முதல்வருடன் நடந்த கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த மருத்துவக் குழுவினரின் ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மருத்துவக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் நிர்வாகி பிரதீப் கவுர் கூறியதாவது:

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனையை குறைக்கக் கூடாது என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிக அளவிலான பரிசோதனைகள் நடந்ததால்தான் அதிகளவு கொரோனா பரவலைக் கண்டுபிடிக்க முடியும். பாதிப்பு அதிகரிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. தமிழகத்தில் கொரோனாவினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பணியிடங்களில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.  ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும். கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும் என்றார் பிரதீப் கவுர்.

  • செய்தி: சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories