January 19, 2025, 8:23 AM
23.5 C
Chennai

9 வயது இரட்டை பெண் பிள்ளைகள்! ஆற்றில் மூழ்கி ஒன்றாய் இறந்த சோகம்!

தாயின் கண் எதிரே இரட்டை குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூர் சங்கம்பட்டியில் வசித்து வருபவர்கள் வீரமலை – கண்ணம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 ஆண்பிள்ளைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக இரட்டை சகோதரிகளா பிறந்தவர்கள் ராமுப்ரியா (9), லெட்சுமிப்ரியா(9).

சிறுமிகள் இருவரும் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் துணிதுவைப்பதற்காக கண்ணம்மாள் தனது மகள்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் அங்கு விளையாடிக்கொண்டிருந்தனர்.


இதனிடையே குழந்தைகள் இருவரும் குளத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்துள்ளனர். இதனை கவனிக்காமல் கண்ணம்மாள் துணி துவைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட கண்ணம்மாள் கதறி துடித்துள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், போகும் வழியில்லையே குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இதனை அடுத்து குழந்தைகளின் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ALSO READ:  சபரிமலை மகரஜோதி; ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்!

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவளர்கின்றனர். தாயின் கண்முன்னே குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.