December 6, 2025, 5:11 AM
24.9 C
Chennai

கொரோனா: முதியவர்கள், கர்ப்பிணிகளை கண்காணிக்க புதிய செயலி!

app

சென்னையில் கருவுற்ற பெண்கள் மற்றும் 60 வயதினரை கண்காணிக்க மாநகராட்சியும், தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 33 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கள பணியில் ஈடுபடும் 11 ஆயிரத்து 500 பேர் வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலை குறித்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய முயற்சியாக கொரோனா கண்காணிப்பு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கருவுற்ற பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் உடல்நிலை குறித்தும், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு போன்றவை இருக்கின்றனவா? என்பது குறித்தும் தகவல்களை சேகரித்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் முதியவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் உள்ள வீட்டில் அனைவரின் தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 3 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வீடியோ கால் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் மக்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டால் அவர்களை கண்காணிக்க வார்டு வாரியாக புதிதாக 640 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், தகவல் தெரிவித்தால் மருத்துவர்கள் உடனே நேரில் சென்று சிகிச்சை அளிக்க இந்த செயலி உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள இந்த புதிய செயலியை நடைமுறை படுத்துவதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என்று பெரும் நம்பிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories