கொரோனா: முதியவர்கள், கர்ப்பிணிகளை கண்காணிக்க புதிய செயலி!

app

சென்னையில் கருவுற்ற பெண்கள் மற்றும் 60 வயதினரை கண்காணிக்க மாநகராட்சியும், தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 33 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கள பணியில் ஈடுபடும் 11 ஆயிரத்து 500 பேர் வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலை குறித்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய முயற்சியாக கொரோனா கண்காணிப்பு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கருவுற்ற பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் உடல்நிலை குறித்தும், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு போன்றவை இருக்கின்றனவா? என்பது குறித்தும் தகவல்களை சேகரித்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் முதியவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் உள்ள வீட்டில் அனைவரின் தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 3 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வீடியோ கால் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் மக்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டால் அவர்களை கண்காணிக்க வார்டு வாரியாக புதிதாக 640 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், தகவல் தெரிவித்தால் மருத்துவர்கள் உடனே நேரில் சென்று சிகிச்சை அளிக்க இந்த செயலி உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள இந்த புதிய செயலியை நடைமுறை படுத்துவதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என்று பெரும் நம்பிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories