spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி

கோவில்பட்டி: தமிழக முதல்வராக் ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என்று வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வரும் நாகராஜன் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது உடலில் பழைய துணிகளைச் சுற்றிக்கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அவர் தனது நண்பர்கள் மற்றும் வீட்டில் சொல்லி வந்தாராம். இதே காரணத்தை முன்னிட்டு அவர் தன் மீது தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரைக் காப்பாற்றி கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துச் செல்வி என்ற மகளும், சேது ரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe