காரைக்குடி: காரைக்குடியில் தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி, காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி கல்லூரிச் சாலையில் மொபைல் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணும் அவரது காதலனான தேவகோட்டை ரஸ்தா காளிதாசும் (26) நேற்று இரவு 7 மணிக்கு மேல் தனியாகச் சென்றுள்ளனர். வேலங்குடி செல்லும் சாலையில் ரயில்வே டிராக் அருகே இருவரும் தனியாகப் பேசி கொண்டிருந்தனராம். இந்த சாலையின் இருபுறமும் முந்திரிக் காடு உள்ளது. அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் “போலீஸ்’ எனவும், “அய்யா’ கூப்பிடுகிறார் வண்டியில் ஏறு எனவும் அந்தப் பெண்ணை மிரட்டி ஏற்றியுள்ளனர். உடன் வந்த காளிதாசையும் மிரட்டி விரட்டியுள்ளனர். இதன்பின்னர் அந்தப் பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினையும் பறித்துள்ளனர். இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பி வந்த காளிதாஸ் செட்டிநாடு போலீசில் சென்று புகார் செய்தார். இதை அடுத்து, டி.எஸ்.பி.,முத்தமிழ் தலைமையில் போலீசார் காட்டுக்குள் சென்று தேடினர். இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றவர்கள், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அவரை விட்டுவிட்டு தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தான் வேலை செய்த மொபைல் கடை உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், டி.எஸ்.பி., முத்தமிழ், அப்பெண்ணை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தப்பியோடிய 2 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
போலீஸ் என மிரட்டி காதலனுடன் சென்ற பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு வலைவீச்சு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

