February 23, 2026, 10:34 AM
26 C
Chennai

போலீஸ் என மிரட்டி காதலனுடன் சென்ற பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு வலைவீச்சு

காரைக்குடி: காரைக்குடியில் தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி, காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி கல்லூரிச் சாலையில் மொபைல் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணும் அவரது காதலனான தேவகோட்டை ரஸ்தா காளிதாசும் (26) நேற்று இரவு 7 மணிக்கு மேல் தனியாகச் சென்றுள்ளனர். வேலங்குடி செல்லும் சாலையில் ரயில்வே டிராக் அருகே இருவரும் தனியாகப் பேசி கொண்டிருந்தனராம். இந்த சாலையின் இருபுறமும் முந்திரிக் காடு உள்ளது. அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் “போலீஸ்’ எனவும், “அய்யா’ கூப்பிடுகிறார் வண்டியில் ஏறு எனவும் அந்தப் பெண்ணை மிரட்டி ஏற்றியுள்ளனர். உடன் வந்த காளிதாசையும் மிரட்டி விரட்டியுள்ளனர். இதன்பின்னர் அந்தப் பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினையும் பறித்துள்ளனர். இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பி வந்த காளிதாஸ் செட்டிநாடு போலீசில் சென்று புகார் செய்தார். இதை அடுத்து, டி.எஸ்.பி.,முத்தமிழ் தலைமையில் போலீசார் காட்டுக்குள் சென்று தேடினர். இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றவர்கள், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அவரை விட்டுவிட்டு தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தான் வேலை செய்த மொபைல் கடை உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், டி.எஸ்.பி., முத்தமிழ், அப்பெண்ணை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தப்பியோடிய 2 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories