December 5, 2025, 4:39 PM
27.9 C
Chennai

ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?

edappadi dinakaran panneerselvam - 2025

சென்னை:

மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட மத்திய அரசின் உதவியை நாடினார் ஜெயலலிதா. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. கோபத்தில் ஒரு டீ பார்ட்டி வைத்தார். காங்கிரஸுடன் கை கோர்த்தார். மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஒற்றை ஒட்டில் அரசு கவிழ்வதற்கு அதிமுக.,வின் ஜெயலலிதா காரணமாக இருந்தார். இது அப்போது பரபரப்புடன் பேசப் பட்டது.

இப்போது அதே போன்றதொரு நிலைமை, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப் பட்டு வளர்க்கப் பட்ட அதிமுக.,வுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாத நிலையில், ஜெயலலிதா செய்த அதே போன்றதொரு துரோகத்தை இப்போது அவரது கட்சிக்கு அவரது கட்சிக் காரர்களே செய்யத் துணிந்து விட்டார்கள். அதிமுக.,வைக் கைப்பற்றியே தீருவது, ஆட்சியில் தங்களின் ஆட்சியை நிலைநாட்டியே தீருவது என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், முன்னர் அதிமுக.,வில் இருந்து முறைகேடுப் புகார்கள் வந்த காரணத்தால் துரத்தியடிக்கப் பட்டார்கள். அவ்வாறு துரத்தப் பட்டவர்களில் சசிகலாவும் ஒருவர். பின்னாளில், அரசியலில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் அவரை தனது வீட்டுக்குள் அனுமதித்தார் ஜெயலலிதா. ஆனால் சொல்லி வைத்தது போல், ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்குள் ஜெயலலிதா உடல் நலக் குறைவு கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, நன்றாகத் தேறி வருகிறார் என்று மருத்துவமனையால் ஒவ்வொரு நிமிடமும் உறுதிப் படுத்தப் பட்ட நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் ஜெயலலிதா.

இந்நிலையில்தான் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். சசிகலாவின் கூட்டாளிகளாக இருந்தும் ஓ பன்னீர் செல்வம் திடீரெனப் பொங்கி எழ, கட்சி பிளவு கண்டது. கூவத்தூரில் மீதமுள்ளவர்களை அடைத்துவைத்து, தாமே முதல்வராக வர முயன்று முடியாத நிலையில் எடப்பாடி தலைமையில் ஆட்சியை அமைத்தார் சசிகலா. இந்நிலையில் சிறைக்குச் சென்றுவிட்ட சசிகலாவுக்கு பதிலாக தினகரன் கட்சி அரசியலைத் தொடர்ந்து நடத்தி வர, மேலும் ஒரு பிளவு கண்டது அதிமுக.,

இதனிடையே பிரிந்து நின்ற அதிமுக.,வின் இரு அணிகளும் இணைந்தன. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கை கோத்துவிட, தினகரன் விழி பிதுங்கி நின்றார். ஆனால், இரு அணிகளும் சேர்ந்துவிட்ட பின்னர், தினகரன், சசிகலா என அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்க, மீண்டும் ஒரு பிளவு நாடகம் அதிமுக.,வில் அரங்கேறியது. தற்போது தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இன்று காலை ஆளுநரைப் பார்த்து, எடப்பாடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறினர். இதனால் ஆளும் அரசுக்கான பெரும்பான்மை பலம் தற்போது குறைந்துவிட்டது.

இதைத்தான் திமுக.,வும் எதிர்பார்த்துள்ளது. இதை அடுத்து திமுக, தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மை பலத்தை ஆளும் அரசு நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காய் நகர்த்தத் துவங்கியுள்ளது. இதனால் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 135 பேர் பலம் உள்ளது. அவர்களில் தினகரனுக்கு 19 பேர் ஆதரவளித்துள்ளதால், தற்போது, பன்னீர்செல்வம் ஆதரவு மற்றும் எடப்பாடி ஆதரவு என மொத்தம் 116 பேர் உள்ளனர். ஆட்சி நிலைக்க 117 பேரின் ஆதரவு தேவை. ஒருவரின் ஆதரவில் ஊசலாடுகிறது அரசு.
தினகரனின் ஆதரவாளர்கள் 19 பேர், திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்பாளர்களாக 117பேர் உள்ளனர். காலியிடம் 1 என்பதால், ஒற்றை ஓட்டில் ஊசலாடுகிறது அதிமுக., அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories