சென்னை மாநகராட்சியின் பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் என கூறி கூட்டத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி இன்று தாக்கல் செய்தார். மாநகராட்சியின் மொத்த வரவு 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் எனவும் மாநகராட்சியின் செலவுத் தொகை 2 ஆயிரத்து 41 கோடி ரூபாயாக உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் சாலைகள் அமைக்க ஆயிரத்து 232 கோடி ரூபாயும், மெரினாவில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க 90 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பது, குடிநீர் பிரச்னையை தீர்ப்பது என்பன உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

