வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி கைது

சென்னை: வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் அளவுக்கு ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி சென்னையில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக இருந்தவர். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் அஜீத் என்ற மாணவனுக்கு நான் வீட்டுக்கு சென்று டியூசன் சொல்லிக் கொடுப்பேன். மாணவன் அஜீத்தின் தந்தை பெயர் ஆனந்தகுமார்(வயது 46). தாயார் பெயர் நிர்மலா(42). ஆனந்தகுமாரும், நிர்மலாவும் தங்களை பெரிய டாக்டர்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெரிய டாக்டர்களாக பணியாற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர். சென்னை போலீஸ் கமிஷனரும், மாநகராட்சி கமிஷனரும் தங்களது நண்பர்கள் என்று சொன்னார்கள். மாநகராட்சி கமிஷனரின் தாயாருக்கு தாங்கள்தான் குடும்ப டாக்டர்கள் என்றும் கதை விட்டனர். சென்னையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் எங்களுக்கு தெரியும் என்றும் நாடகமாடினார்கள். தனது செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் வேலை அல்லது மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகையில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக ஆனந்தகுமார் கூறினார். மேலும் பலருக்கும் மாநராட்சி பள்ளிகளிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் வேலை பெற்றுத் தருவதாக ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் ஆசை காட்டினார்கள். அதை உண்மை என்று நம்பி, எனக்கும், எனது தம்பி, தங்கைக்கும் அவர்களிடம் வேலை கேட்டு, ரூ.6½ லட்சம் பணம் கொடுத்தேன். எங்களுக்கு வேலைக்கான அரசாணையும் வழங்கினார்கள். அதை வைத்து ரிப்பன் மாளிகைக்கு சென்று கேட்டபோது, ஆனந்தகுமார் கொடுத்த வேலைக்கான அரசாணை போலி என்பது தெரிய வந்தது. மேலும் ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், டாக்டர் படிப்பை பாதியில் விட்டவர்கள் என்றும், தங்களை டாக்டர்கள் என்று ஏமாற்றி நிறைய பேரிடம் இதுபோல் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர், என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், போலீஸ் கமிஷனருக்கும் நண்பர்கள் என்று சொன்னதும் கட்டுக்கதை ஆகும். இந்த போலி டாக்டர் தம்பதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். – என்று தெரிவித்திருந்தார். காமராஜ் அளித்த இந்தப் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதை அடுத்து நடைபெற்ற விசாரணையில் காமராஜைப் போல நிறைய பேரிடம் ஆனந்தகுமார், நிர்மலா தம்பதி மோசடி லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் ஏமாந்த மேலும் 10 பேர் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் ரூ.33 லட்சம் அளவுக்கு இருவரும் ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரும் கோடிக்கணக்கில் பணமோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் தம்பதியான ஆனந்தகுமார், நிர்மலா இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்கள். டாக்டர் என்று கூறி, மோசடி செய்து பணம் குவித்துள்ளனர். இவர்களிடம் ஏமாந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories