December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

வங்கியில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்த இளைஞர்! கள்ள நோட்டால் அதிர்ந்த அதிகாரி!

money 1
money 1

வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கி பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வருகிறது. அந்த வங்கிக்கு ஒரு இளைஞர் இரண்டு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேஷியரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அப்போது அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இதுகுறித்து மேனேஜர் செல்வகுமார் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த இரண்டு லட்சம் ரூபாய் நோட்டுகளை வங்கி மேனேஜர் மற்றும் ஊழியர்கள் சோதனை செய்தபோது 28 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பதை அவர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

இதனை தொடர்ந்து 14 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த மேனேஜர் உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்த போது, தான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் இந்த பணத்தையும் வங்கி எண்ணையும் கொடுத்து டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கள்ள நோட்டு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிய அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவருக்கு இந்த பணத்தை கொடுத்து அனுப்பிய தனியார் நிறுவனத்தைப் பற்றியும், அவர்களுக்கு இந்த கள்ள நோட்டு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories