December 6, 2025, 1:38 PM
29 C
Chennai

கான்க்ரீட் வீடு கட்டி தரப்படும்: முதல்வர்!

cm-1
cm-1

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு என பலக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக தலைவர், ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சயின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய அதிமுக 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி, ஹாட்ரிக் சாதனை படைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.

இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் வரும் தேர்தலில் வெற்றியை தக்கவைக்க தீவிரமாக செயல்பட்டு வரும் அதிமுக சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக மக்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என்றும், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். விழுப்புரத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர் ‘தமிழகத்திலே அதிமுக அரசு முதன் முறையாக கடல் நீரை குடிநீராக்கி கிராமப்புறங்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கும் நகர மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அதிமுக அரசு, ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்த கொண்டு வந்துள்ளது. மேலும் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும், தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்’ என உறுதியளித்தார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ், விவசாய கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், அரசு ஊழியர்கள் வீடுகட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் 40 லட்சமாக உயர்வு என தமிழக அரசு மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுளளது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories