February 22, 2026, 11:04 AM
29.6 C
Chennai

10 நிமிட தாமதத்துக்காக ‘வாத்து நடை’ தண்டனை; மாணவன் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!

 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டி போட்டு நடந்து செல்லும் தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை முடிந்து நேற்று தாமதமாக வந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து போல முட்டி போட்டு செல்லும் தண்டனை கொடுத்துள்ளார். இதில் 10-ம் வகுப்பு படிக்கும் நரேந்தர் என்ற மாணவன் முட்டி போட்டு சிறிது நேரம் சென்ற நிலையில், மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் மாணவனை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை ஸ்டாலின் மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் நரேந்தர் பரிதாபமாக இறந்துபோனான்.
காலை 10 மணிக்கு நரேந்தரின் தந்தை முரளிக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன் செய்து, மாணவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தனர். பள்ளிக்கு பரபரக்கச் சென்ற முரளியிடம் ‘மாணவனின் இறப்பு இயற்கையானது’ என்று கையொப்பம் வாங்கியுள்ளனர்.
பலியான மாணவனின் பெற்றோரிடம் சக மாணவர்கள் நடந்த சம்பவத்தைக் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை நேற்று இரவு முற்றுகையிட்டனர். பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவன் வாத்து போல முட்டி போட்டுச் சென்று மயங்கி விழுவதும் பின்னர், ஆட்டோவில் எடுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் பலிக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories