10 நிமிட தாமதத்துக்காக ‘வாத்து நடை’ தண்டனை; மாணவன் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!

 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டி போட்டு நடந்து செல்லும் தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை முடிந்து நேற்று தாமதமாக வந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து போல முட்டி போட்டு செல்லும் தண்டனை கொடுத்துள்ளார். இதில் 10-ம் வகுப்பு படிக்கும் நரேந்தர் என்ற மாணவன் முட்டி போட்டு சிறிது நேரம் சென்ற நிலையில், மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் மாணவனை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை ஸ்டாலின் மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் நரேந்தர் பரிதாபமாக இறந்துபோனான்.
காலை 10 மணிக்கு நரேந்தரின் தந்தை முரளிக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன் செய்து, மாணவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தனர். பள்ளிக்கு பரபரக்கச் சென்ற முரளியிடம் ‘மாணவனின் இறப்பு இயற்கையானது’ என்று கையொப்பம் வாங்கியுள்ளனர்.
பலியான மாணவனின் பெற்றோரிடம் சக மாணவர்கள் நடந்த சம்பவத்தைக் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை நேற்று இரவு முற்றுகையிட்டனர். பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவன் வாத்து போல முட்டி போட்டுச் சென்று மயங்கி விழுவதும் பின்னர், ஆட்டோவில் எடுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் பலிக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories