10 நிமிட தாமதத்துக்காக ‘வாத்து நடை’ தண்டனை; மாணவன் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!

 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டி போட்டு நடந்து செல்லும் தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை முடிந்து நேற்று தாமதமாக வந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து போல முட்டி போட்டு செல்லும் தண்டனை கொடுத்துள்ளார். இதில் 10-ம் வகுப்பு படிக்கும் நரேந்தர் என்ற மாணவன் முட்டி போட்டு சிறிது நேரம் சென்ற நிலையில், மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் மாணவனை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை ஸ்டாலின் மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் நரேந்தர் பரிதாபமாக இறந்துபோனான்.
காலை 10 மணிக்கு நரேந்தரின் தந்தை முரளிக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன் செய்து, மாணவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தனர். பள்ளிக்கு பரபரக்கச் சென்ற முரளியிடம் ‘மாணவனின் இறப்பு இயற்கையானது’ என்று கையொப்பம் வாங்கியுள்ளனர்.
பலியான மாணவனின் பெற்றோரிடம் சக மாணவர்கள் நடந்த சம்பவத்தைக் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை நேற்று இரவு முற்றுகையிட்டனர். பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவன் வாத்து போல முட்டி போட்டுச் சென்று மயங்கி விழுவதும் பின்னர், ஆட்டோவில் எடுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் பலிக்கு காரணமானவர்களைக் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories