விஜய் சேதுபதி பட ஷூட்டிங்: கூட்டம், பின்பற்றப்படாத வழிமுறைகள்.. கொரோனா அபாயம்!

dindukal - 2026

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடிகா் விஜயசேதுபதி புதிதாக நடிக்கும் திரைப் படக் காட்சிகளின் படப்பிடிப்பு, பேருந்து நிலையத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பினைக் காண, 500-க்கும் மேற்பட்டோா் அங்கு திரண்டனர். முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

இதனிடையே, பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த கட்டடத்தில் ஏறி கூட்ட நெரிசலை படம் பிடித்த பத்திரிகை புகைப்பட கலைஞா்களையும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களையும் படப்பிடிப்புக் குழுவினர் எச்சரித்தனர்.

இதனால், பத்திரிகையாளா்களுக்கும், படப்பிடிப்புக் குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தம்: படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் தொடா்ந்து பரபரப்பு நிலவியதால், அதிருப்தி அடைந்த நடிகா் விஜயசேதுபதி அங்கிருந்து வெளியேறினார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே தகவல் அறிந்து வட்டாட்சியா், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து படப்பிடிப்பு தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அனுமதி குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றம்சாட்டிய அதிகாரிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதை தவிா்க்க வேண்டிய பொறுப்பு படப்பிடிப்பு குழுவைச் சாா்ந்தது என தெரிவித்துவிட்டு சென்றனர்.

ஆனால் மாலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது, கிருமிநாசினி தெளித்தல், கைசுத்திகரிப்பான் பயன்பாடு, சமூக இடைவெளி உள்ளிட்ட எவ்வித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

படப்பிடிப்பு குழுவினா் மீது குற்றச்சாட்டு: கடந்த 2 நாள்களாக பழனி சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், வேடிக்கை பாா்க்க செல்லும் பொதுமக்களை படப்பிடிப்பு குழுவினர் மிரட்டுவதாகவும், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்வதாகவும் காவல் துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டங்கள் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதை மாவட்ட நிா்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories