யூட்யூப் பார்த்து செயின் பறிக்க வந்த திருடன்! போராடி மீட்ட 62 வயது மூதாட்டி!

ramathal
ramathal

செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனுடன் போராடி நகையை மீட்ட 62 வயது மூதாட்டிக்கு காவல்துறையினர் பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமாத்தாள். 62 வயதான இவர் பக்கத்து வீட்டு பெண்ணுடன் தென்றல் நகர்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞன் ஒருவன் ராமாத்தாளின் கழுத்தில் இருந்த 2.5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.

ஆனால் ராமாத்தாள் இரு சக்கரவாகத்தை கெட்டியாக பிடித்து கொண்டு வண்டியை நகர விடாமல் சப்தம் எழுப்பினார். ராமத்தாளின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இந்த இளைஞரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவன் கீழே கிடந்த கல்லை எடுத்து பிடிக்க வந்தவர்களை தாக்கி விடுவேன் என மிரட்டியதுடன் தன்னை தானே தாக்கி கொள்ளவும் செய்த நிலையில் அந்த இளைஞரை பிடித்த பொது மக்கள் துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த இளைஞரின் பெயர் தனபால் என்பதும் பட்டதாரி இளைஞர் என்பதும் தெரியவந்தது.

கரூரை சேர்ந்த அந்த இளைஞர் நல்லாம்பாளையம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை சென்று வந்ததும், சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இரு சக்கர வாகனம் வாங்கியதற்கான தவணையை செலுத்த கடன் கொடுத்த வங்கி தரப்பில் இருந்து கேட்டதால் வேறு வழியின்றி திருட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செயின் எப்படி திருடுவது என்பதை யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்ட பட்டதாரி இளைஞர் தனபால், முதல் முயற்சியாக வயதான பெண்ணிடம் செய்து பார்க்க திட்டமிட்டுள்ளார் .

முதல் முயற்சியிலேயே ராமாத்தாளிடம் 2.5 பவுண் செயினை திருடிவிட்டு தப்ப முயன்றபோது , அவர் வாகனத்தை கெட்டியாக பிடித்து கொண்டதால் தனபால் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து அவனிடம் இருந்து 2.5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் துணிச்சலுடன் செயல்பட்ட 62 வயதான ராமாத்தாளை அழைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், செயின் பறிப்பு திருடனை தைரியமாக மடக்கி பிடித்தற்காக பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியதோடு, ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories