இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி அடைத்து வைத்த இளைஞர் கைது!

dhinesh - 2026

சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரோசி. இவருக்கு 19 வயதில் வைசாலி என்ற மகள் இருக்கிறார்.

12ஆம் வகுப்பு முடித்து விட்டு வைசாலி கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

புதன்கிழமை மாலை வைசாலி பணிமுடிந்து சூளை அஷ்டபுஜம் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது பக்கத்து தெருவில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் 25 வயதான தினேஷ் என்பவர் வைசாலியை வீட்டில் விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.

சிந்தாதிரிபேட்டை, பாரிமுனை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிய தினேஷ், வைசாலியை எண்ணூரில் உள்ள ஒரு வீட்டில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அடைத்து வைத்துள்ளார்.

வைசாலியை தான் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி தினேஷ் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் பயந்து போன வைசாலி செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டு தினேஷ் தன்னை கடத்தி எண்ணூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

உடனே தாய் ரோசி இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வைசாலியின் செல்போன் நம்பரை வைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தினேஷ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

தனக்கு தெரிந்த பவித்ரா என்ற பெண்ணின் கணவர்தான் தினேஷ் என்றும், தெரிந்தவர் என்பதால் அழைத்ததும் ஆட்டோவில் ஏறியதாகவும் வைசாலி போலீசாரிடம் கூறினார்.

சம்பவத்தன்று இம்ரான் என்பவர் ஆட்டோவை ஓட்டியதாகவும், தினேஷ் பின்னால் அமர்ந்து கொண்டு தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு கத்தியை காட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட தினேஷின் செல்போன் எண்ணை வைத்து அவர் சென்ட்ரலில் பதுங்கி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார் கஞ்சா போதையில் இருந்த தினேஷ் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் இம்ரான் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தினேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 வருடங்களுக்கு முன்பே அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், பவித்ராவுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தததும் தெரியவந்தது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

அதேபோல் வைசாலியையும் தன்வசப்படுத்த நினைத்து தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். தினேஷ், இம்ரான் ஆகிய இருவர் மீதும் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories