தனியார் பள்ளி வளாகத்தில் போதைப் பொருட்கள்! மர்ம நபர்கள் அட்டூழியம்!

kovai - 2026

கோவை, சுகுணாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் குவிந்து கிடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டதால், போதைக்கு அடிமையான சிலர், வலி நிவாரணி மாத்திரைகளை கடைகளில் வாங்கி அவற்றை தூளாக்கி, ஊசி மூலமாக உடலில் செலுத்திக் கொள்வது கோவையில் அதிகமாகக் காணப்பட்டது.
போதை ஊசிகள், மாத்திரைகள் விற்பனையும் அதிகரித்தது.

கோவை, குனியமுத்தூரில் போதை ஊசி விற்ற 4 பேரை கடந்த வாரம் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே உக்கடம், புல்லுகாடு பகுதியில் இளைஞர்கள் கும்பலாக அமா்ந்து உடலில் போதை ஊசிகள் செலுத்தும் விடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

அந்த கும்பலைப் பிடிக்க போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டுகள் இல்லாமல், வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகள் வழங்கக்கூடாது என மருந்துக் கடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை குனியமுத்தூா் அருகே உள்ள சுகுணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள், தண்ணீர் பாட்டில்கள், மதுபாட்டில்கள் கொட்டப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

இது அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

இப்பள்ளியில் 900 மாணவா்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்துக்குள் சில மர்ம நபர்கள் புகுந்து கஞ்சா, போதை மாத்திரை, ஊசிகள், மதுபானங்கள் உபயோகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அடிக்கடி பள்ளியின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகள் குவிந்து கிடக்கின்றன.

அவற்றை நாய்கள் கொண்டு வந்து குடியிருப்புப் பகுதிகளில் போட்டுச் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக போலீஸாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories