கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை.. காதல் மனைவியை கொன்ற கணவன்!

kristi
kristi

சோழவந்தான் அருகே திருமணமான கல்லூரி மாணவி மாயமானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக திருப்பரங்குன்றம் அருகே முட்புதரில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்

கொலை சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் காதல் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் முட்புதருக்குள் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ்-செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பது தெரியவந்தது.

மேலும் அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் கிளாடிஸ் ராணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்ததால் இருவருக்கும் கடந்த 02.08.2021 ம் தேதி பெண் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் 4-ம் தேதி வெளியே சென்று வரலாம் என ஜோதிமணி கிளாடிஸ் ராணியை அழைத்து சென்றுள்ளார் .

இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பிய நிலையில் கிளாடிஸ் ராணியை காணவில்லை என கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணி ஊர்முழுக்க தேடுவது போன்ற நாடகம் ஆடியுள்ளார்.

இதனையடுத்து நான்காம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் செய்துள்ளனர்.

கிளாடிஸ் ராணியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்தனர்.

jothimani
jothimani

இந்நிலையில் ஜோதிமணி இடம் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

போலீஸாரிடம் ஜோதிமணி அளித்த வாக்குமூலத்தில், ‘கிளாடிஸ் ராணி கடந்த 2ம் தேதி தன்னை சோழவந்தானில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்தார்.

காதலி அழைத்ததால் நானும் அவரை பார்ப்பதற்காக சென்றேன். வீட்டிற்குள் சென்றதும் ராணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னைச் சுற்றிவளைத்து ராணி 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் எனவே அவளை கர்ப்பமாக்கிய நீ ராணியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதை அடுத்து அதிர்ச்சியுற்றேன்.

ராணியின் 4 மாத கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல எனக் கூறியும் என்னை மிரட்டி எனது பெற்றோருக்கும் தெரிவிக்காமல் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதனால் ராணியின் மீது ஆத்திரத்தில் இருந்தேன். கடந்த 4-ம் தேதி என் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி ராணியின் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் அழைத்துச்சென்றேன்.

அவனியாபுரம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் வைத்து கிளாடிஸ் ராணியிடம் நீ கர்ப்பமாகியதற்கு நான் தான் காரணம் என பொய் சொல்லி என்னை கட்டாய திருமணம் செய்தது ஏன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டேன்.

அங்கிருந்து ராணியின் வீட்டிற்கு வந்தேன் அவரது பெற்றோரிடம் ராணியும் நானும் கல்லூரிக்கு சென்றதாகவும் கல்லூரியில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை எனவும் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தேன்.

ராணியின் பெற்றோருடன் சேர்ந்து ராணியை தேடுவது போல் நாடகமாடினேன்’ எனப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இளம் பெண் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி இந்த கொலை தனிஆளாக செய்தாரா? அல்லது வேறு நபர்கள் கூட்டாக சேர்ந்து செய்தார்களா? என்பது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி காதலனால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories