ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்தல்! 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

gold stone - 2026

திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை இந்திய அரசு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் ஆசனவாயிலில் 475 கிராம் தங்கத்தை வைத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் அதே விமானத்தில் வந்த பயணிகளில் 9 பேரைச் சோதனை செய்ததில் ஒன்பது பயணிகளும் ஒரே மாதிரியான தங்கச்சங்கிலியை அணிந்திருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு பிரிவினர் அவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களுடைய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர்களைச் சோதனை செய்தனர்.

இதில் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த ஒரே மாதிரியான தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் மொத்தமாக 1.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 90 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நேற்று ஒரு நாள் மட்டும் விமானத்தில் வந்த பயணிகளில் பத்து பேரிடம் இருந்து மொத்தம் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories