போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்

போலீஸார் தன்னை தாக்கி அவமானப் படுத்தியால் தீக்குளித்த கார் டாக்ஸி டிரைவர் மணிகண்டன், இன்று மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கியிருந்தபடி, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணியில் இருந்தார். இவர், நேற்று மாலை வேளச்சேரிக்கு வாடிக்கையாளரை இறக்கிவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வேளச்சேரி போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த மணிகண்டன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்ததாகத் தெரியவந்ததும் போலீஸார் காரை நிறுத்தினர். ஏன் சீட் பெல்ட் அணியாமல் வந்தாய் என்று கேட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்வதாகக் கூறிய போக்குவரத்து போலீசார், அவரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அபராதத் தொகை கட்டி ரசீது வாங்கிச் சென்ற மணிகண்டன், மீண்டும் அந்தப் பகுதியில் வந்து, வாகனச் சோதனை என்ற பெயரில் போக்குவரத்து போலீஸார் யாரிடம் எல்லாம் லஞ்சம் பெறுகின்றனர் என்று அருகில் இருந்து கொண்டு செல்போனில் படம் பிடித்தாராம். இதனால், போக்குவரத்து போலீசார், டிரைவர் மணிகண்டனை அருகில் உள்ள போலீஸ் பூத்துக்கு கூட்டிச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனின் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறித்துக் கொண்டனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

போலீசார் தன்னை தாக்கியதை அவமானமாகக் கருதிய டிரைவர் மணிகண்டன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தார். தனது கார் முன் வந்து, போக்குவரத்து போலீசார் கண் எதிரேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரது உடலில் தீ பரவியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அங்கிருந்து ஓடி விட்டனர். ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் ஓடி வந்து மணிகண்டன் உடலில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார்.

இதைக் கண்டதும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அங்கு திரண்டு வந்தனர். எதற்காக தீக்குளித்தாய்? என மணிகண்டனிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்ததைக் கூறினார் மணிகண்டன். .இதனால் அந்த போக்குவரத்து போலீஸ்காரரும் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்தத் தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கானோர் அங்கே திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்குள் தரமணி போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்து, தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய டிரைவர் மணிகண்டனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்று இன்று மணி கண்டன் உயிரிழந்தார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இந்நிலையில் கார் டிரைவர் தீக்குளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories