உடன்குடி அனல்மின் நிலையத் திட்ட ரத்து செய்தி நிர்வாகக் குளறுபடிக்கு உதாரணம்: மு.க.ஸ்டாலின்

Published:

  சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத் திட்டம் ரத்து என்னும் செய்தி அரசின் நிர்வாகக் குளறுபடிக்கு ஒரு உதாரணம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி…. உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் ரத்து என்னும் செய்தி அதிமுக அரசின் ஊழல் மற்றும் நிர்வாகக் குழறுபடிகளுக்கு மற்றுமொரு சிறந்த உதாரணம். கழக அரசு இந்த திட்டத்தை பெல் என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து நிறைவேற்றும் வகையில் 2008 ம் வருடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 2012 ம் வருடம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2013ம் வருடம் மின்வாரியமே நிறைவேற்ற டெண்டர் கோரினார். 1320 மெகாவாட் மின்சாரம் அளிக்கும் இந்த திட்டம் பலவகையிலும் தாமதம் செய்யப்பட்டு, இதில் பங்கேற்ற சீனா நிறுவனம் டெண்டா் விதிகள் மீறப்படுவதாகக் கூறி நீதிமன்றம் சென்றது. மாநில தேவைக்கு தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை இப்போது அமைச்சராக இருக்கும் நத்தம் விசுவநாதனும், முன்பு தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் தற்போது தலைமை செயலாளர் ஆக இருக்கும் ஞானதேசிகனும் சேர்ந்து தான் வாங்கினார்கள். இந்த திட்டம் தாமதம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே 80,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கும் மின்வாரியத்தில் ஒரு திட்டத்தை ரத்து செய்து 80 கோடி ரூபாயை தேவையற்ற முறையில் நஷ்டப்படுத்தி இருப்பது தான் இன்றைய அதிமுக அரசின் அவல நிலைமை.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img