நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ம்தேதி அன்று எரிவாயு
நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம்,
முறைகேடுகள் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் வருகிற 24ம்தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.