சென்னை: விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.யும், தேசிய விமான நிலைய ஊழியர்கள் ஆணைய ஒருங்கிணைப்பாளருமான சௌகத் ராய் தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் சங்க தலைவர் சந்தானம், செயலாளர் ஜார்ஜ் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களின் போராட்டத்தால் விமான நிலைய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

