திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் மனோகரன் மாற்றப்பட்டு புதிய தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டி.ஜி. வினய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான வினய் சென்னை மாநகராட்சியின் வருவாய் நிதிப்பிரிவு ஆணையராகத் பணியாற்றி வந்தார். ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அவர் இன்று பொறுப்பேற்கிறார். தேர்தல் அதிகாரியாக இருந்த மனோகரன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதன் காரணமாக, ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி பொறுப்பிலிருந்து மனோகரன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் வினய் நேற்று இரவு புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

