அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி

அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி: இன்று துவங்குகிறது

சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை 4 நாட்கள் மூலிகை கண்காட்சி நடக்கிறது.

இதில், 600க்கும்  மேற்பட்ட மூலிகை செடிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வர் கனகவல்லி கூறியதாவது:
அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் மூலிகை கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

அதேபோன்று, இந்த வருடமும் 15ம் தேதி (இன்று) முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் மூலிகை கண்காட்சிகள் நடக்கிறது. மக்களுக்கு தற்போது நிறைய தொற்றுநோய்கள் வருகிறது. எனவே, இந்த மூலிகை கண்காட்சியில் இதை தடுக்கும் விதமாகவும், சித்த மருத்துவத்தினை மக்களுக்கு விளக்கும் விதமாகவும் 600க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

அந்த மூலிகை செடிகளில் அதன் தமிழ் பெயர்கள், மூலிகை பெயர்கள், மருத்துவ பயன்கள், அந்த மூலிகை செடிகள் எந்தவிதமான நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

இந்த கண்காட்சியில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இடம்பெறும். மேலும், 40க்கும் மேற்பட்ட மருத்துவ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுதானிய உணவு என்பது காணாமல் போயுள்ளது. எனவே, பாரம்பரிய உணவு மற்றும் சிறுதானியக் கண்காட்சிகள் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை இடம்பெறுகிறது.

இதையடுத்து, சித்த மருத்துவம் சார்ந்த மூத்த மருத்துவர்கள் கலந்து கொள்ளும் உரையாடல் நடைபெறும். இதேபோல், யோகா பயிற்சி பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது.

மருத்துவ முகாமில் வர்ம சிகிச்சை மற்றும் பாரம்பரிய நெல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவக் கண்காட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் செந்தில்ராஜ், இணை இயக்குநர் பார்த்திபன் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்க்கலாம். 18-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories