மதுரையில் சகாயம் தீவிர விசாரணை: குவாரி அதிபர்கள் மூவர் நாளை ஆஜராக சம்மன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது. அதன்படி அவர் மதுரை மாவட்டத்தில் முகாமிட்டு கிரானைட் முறைகேடு குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகிறார். 6 கட்ட விசாரணை முடிந்த நிலையில் தனது இறுதி கட்ட விசாரனையை கடந்த 16–ந்தேதி தொடங்கினார். அதன்படி கிரானைட் குவாரி அதிபர்களை விசாரிப்பதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பினார். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி அதிபர்களின் வக்கீல்கள் நேரில் ஆஜராகி சகாயத்திடம் தங்களது விளக்கத்தை தெரிவித்தனர். நேற்று பி.ஆர்.பி., சிந்து உள்பட 4 கிரானைட் நிறுவனங்களின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி தங்களது விளக்கத்தை மனுவாக சகாயத்திடம் கொடுத்தனர். அதில் கிரானைட் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் தங்களால் விரிவாக பதில் அளிக்க முடியாது என்று கூறி சில விளக்கத்தை மட்டுமே மனுவில் தெரிவித்து இருந்தனர். இன்று காலை கோரமண்டல் கிரானைட் நிறுவனம் சார்பில் அந்த நிறுவனத்தின் வக்கீல் சகாயத்திடம் ஆஜராகி விளக்கத்தை அளித்தார். இதேபோல் எம்.எஸ். கிரானைட் நிறுவன மேலாளர் கோகுல் தங்களது விளக்கத்தை சகாயத்திடம் தெரிவித்தார். இதேபோல் நாளை கிரானைட் முறைகேடு தொடர்பாக பதில் அளிக்குமாறு முன்னாள் மத்திய மந்திரி அழகிரியின் மகன் துரைதயாநிதி இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட், பி.ஆர். கிரானைட் உள்பட 3 நிறுவனங்களின் அதிபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories