தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்

thol_thirumavalavan சென்னை: இலங்கையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் இதனை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்று பல வாரங்கள் கடந்த பிறகும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. ராணுவத்தை திரும்பப் பெறுவோம் என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளைப் பெற்று மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றார். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த இலங்கை போர்க் குற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த கூட்டத்துக்கு தள்ளிப்போட இலங்கை செய்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த அறிக்கை செப்டம்பர் மாதக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இலங்கைப் பிரச்னையில் முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளையைப் போல தற்போதைய ஆணையர் செயல்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் செல்வாக்கைக் குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொள்ளத் திட்டமிடுகின்றன. ஆனால், தமிழர் நலன்களைப் புறக்கணிக்கும் சிறீசேனாவை இந்தியா ஆதரிப்பது புதிராக உள்ளது. அது இந்துமாக் கடல் பகுதியில் அமெரிக்க ஆதிக்கம் பெருகவே வழிவகுக்கும். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தொடங்கும் முன்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களது நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இலங்கையிடம் இதனை இந்திய அரது வலியுறுத்த வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்களுக்காக தமிழர் நலன்களை பலியிட்டு விடக்கூடாது என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories