புது தில்லி: தமிழக ரயில் திட்டங்களை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரயில்வேத் துறை இணை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தியில்… கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி சுரேஷ் பிரபுவையும், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவையும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டங்கள் குறித்து வலியுறுத்தியதின் தொடர்ச்சியாக நேற்று (19.02.2015) மீண்டும் சுரேஷ் பிரபு மற்றும் மனோஜ் சின்ஹாவை சந்தித்து தமிழகத்திற்கான புதிய ரயில் திட்டங்களை இவ்வாண்டிலேயே செயல்படுத்த வலியுறுத்தினார்.
- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


