29-03-2023 11:58 AM
More
    Homeஉள்ளூர் செய்திகள்பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவிகள் போராட்டம்..

    To Read in other Indian Languages…

    பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவிகள் போராட்டம்..

    500x300 1829256 vnrstudents - Dhinasari Tamil

    பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவிகள் விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த 30 மாணவிகள் புதுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். சொக்கம்பட்டியில் இருந்து நேரடியாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவிகள் புதுப்பட்டிக்கு வந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் செவ்வாய் கிழமை சொக்கம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 30 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேர் விருதுநகர் வந்தனர். அவர்கள் அங்குள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சொக்கம்பட்டியில் இருந்து புதுப்பட்டி அரசு பள்ளிக்கு நேரடியாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புதுப்பட்டியில் இருந்து அரசு பஸ்ஸில் செல்லும்போது கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாணவிகள் கோஷமிட்டனர்.

    பின்னர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரியை சந்தித்து மனு அளித்தனர். அவர் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாணவிகளின் திடீர் போராட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    8 + five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...