ஆட்சியைப் பிடிக்க முயலும் திமுக., தோழமைக் கட்சிகளின் அராஜக அரசியல்: ராம.கோபாலன் கண்டனம்

சென்னை:

பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

rama gopalan - 2026ஜனநாயகத்தில், கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிப்பது என்பதைத் தாண்டி வன்முறையை தூண்டி, தமிழகத்தில் பொது அமைதியைக் கெடுக்கும் தீய சக்திகளின் கை ஓங்கி வருகிறது. இப்படிப் பேசுகிறவர்கள், மனிதம், மனித உரிமை பற்றியும், ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை,  கருத்து சுதந்திரம் பற்றியும் பேசுவது வேடிக்கையானது!

நேற்று இரவு கோவையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகில் நடந்து சென்ற வயோதிகர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் பூணூல், குடுமியை அறுத்து, அவர்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவு பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.

இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூர செயல்கள், தமிழகத்தை ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு செல்கிறது.

இத்தகைய நடவடிக்கைகளை, எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை. அப்படியானால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவழித்துவிட திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான ஒத்திகையாகக்கூட இது நடந்திருக்கலாம். காரணம், தமிழக ஆட்சியின் கைப்பிடி தளர்ந்துள்ளதை பயன்படுத்திக்கொள்ள எல்லோரும் முயலுகிறார்கள். அதில் ஒரு பகுதிதான், பிரிவினைவாத, பயங்கரவாதத்தை அரவணைக்கும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நடவடிக்கைகளாக இருக்கின்றன.

எனவே, இதுபோன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை, காவல்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்பாவி மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கும், பெட்ரோல் பாம் போன்ற ஆயுத கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories