ஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க?: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’

parvatii nair - 2026

சென்னை: சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!

சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து வெளிப்படையான கருத்துகளைக் கூறி வருகிறார் நடிகை பார்வதி நாயர். இவர் மகளிர் தினத்தன்று நள்ளிரவு சென்னையில் ஓலா கேப்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ட்வீட்டரில் பதிவு செய்தார். அந்த ட்வீட் வைரலனது.

அதாவது, சென்னை கார் டிரைவர் ஒருவர், பார்வதி நாயரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாகவும் அதையே டிவீட்டில் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் செய்திகள் ஊடகங்களில் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி நாயர், நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது ட்வீட் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு ஓலாவில் ப்ரைம் காரை புக் செய்தேன். எங்கே இறங்க வேண்டும் என்பதற்கான ஜிபிஎஸ் டிராப் லோகேஷனை சரியாக அழுத்தாததால், கார் டிரைவர் என்னை பாதி வழியில் காரை நிறுத்தி என்னை இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இது நான் இறங்க வேண்டிய இடம் இல்லை என கூறியும் அவர் அதனை ஏற்கவில்லை. கஸ்டமர் கேருக்கு புகார் அளித்தும், அவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஓலா டிரைவரால் எனக்கு எவ்விதமான பாலியல் தொல்லையும் நேரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நான் பதிவிட்டிருந்த ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

parvatii tweet - 2026

இந்நிலையில், ஓலா நிறுவனத்தின் சார்பில் பார்வதி நாயரை தொடர்பு கொண்டு அவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், சர்ச்சையை ஏற்படுத்திய தனது ட்வீட்டை நடிகை பார்வதி நாயர் நீக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories