February 21, 2026, 7:18 AM
24.6 C
Chennai

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மார்ச் 25ல் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்!

dinakaran interview - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் மார்ச் 25ஆம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்.16ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. அதன் படி, காவிரியில் இருந்து கர்நாடகம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்கவும் உத்தரவிட்டது. இது இறுதித் தீர்ப்பு என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதை அடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் 4 வார காலம் முடிந்துவிட்ட நிலையிலும், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுப்பதாக தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடகம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகத்தில் தேர்தல் வருவதை ஒட்டி, மாநில அரசு காவிரி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதுபோல், தமிழகம் தரப்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக., எம்பி.,க்கள் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்ற வாரம் டிடிவி தினகரன் துவங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மார்ச் 25ஆம் தேதி தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப் போராட்டத்தில், டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். புதிய கட்சி தொடங்கிய பின் தினகரன் அறிவித்துள்ள முதல் போராட்டம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories