விருகம்பாக்கம் ஐஓபி., வங்கி கொள்ளையன் நேபாளத்தில் சிக்கினான்!

Published:

sabilal bank theft - 2026

சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியக் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாக்கரை, கேஸ் வெல்டரிங் மூலம் உடைத்து, அதில் இருந்து106 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இந்தக் குழுவினர்  பீகார் மாநிலம் மற்றும் நேபாளத்தில் விசாரணை நடத்தினர்.

bank theft - 2026

இந்நிலையில் நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் என்பவனை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த சபிலாலை, சர்வதேச போலீசார் இண்டர்போல் உதவியுடன் கைது செய்தனர்.

முன்னதாக இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக  3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி சபிலால் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img