December 5, 2025, 9:31 PM
26.6 C
Chennai

காவிரிக்காக போராட்டம்: கலவரக் காடான தமிழகம்!

stalin chennai protest - 2025

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்தக் கோரி, தமிழகம் எங்கும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பல இடங்களில் பஸ் மீது கல்வீச்சு, கண்ணாடி உடைப்பு என வன்முறைகள் வெடித்தன.

நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப் பட்டன. கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். மதுரையில் திமுக.,வினரின் போராட்டத்தின் போது அடிதடி ரகளை ஏற்பட்டது. திமுக.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

வேலூர் அருகே காட்பாடியில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் தனியார் பேருந்து கண்ணாடி உடைக்கப் பட்டது.  காட்பாடி முழுவதும் கடைகள் வணிக நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன.

திருத்தணியில் மின்சார ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அப்புறப் படுத்தப் பட்டனர். திருத்தணி-சென்னை செல்லும் மின்சார ரயிலை மறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தமிழகத்தின் நிலை குறித்து, ஆளுநருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்துப் பேசினார்.  சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநருடன் தமிழிசை சந்தித்துப் பேசினார். பின்னர்,  அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் . காவிரி விவகாரத்தில் போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார் தமிழிசை.

இதனிடையே இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து செவிசாய்க்காத காரணத்தால் தான் இந்தப் போராட்டமே. மத்திய அரசு செவி சாய்க்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், திமுக.,வின் சார்பில் திடீரென போராட்டங்களில் தலை காட்டியுள்ளார், ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories