
ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ 1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மத்திய அரசின் சார்பில் இயங்குபவை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கியது. ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மக்கள் விண்ணப்பித்து வந்தனர்.
சென்னை அசோக்நகரில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆனந்தன், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் இவ்வாறு லஞ்சம் கேட்டது குறித்து மாணவனின் பெற்றோர் சிபிஐ.,க்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை பள்ளி வளாகத்தில் இருக்கும் முதல்வர் வீட்டில் பெற்றோர் லஞ்சப் பணத்தைக் கொடுத்தபோது ஆனந்தனைச் சுற்றி வளைத்த சிபிஐ அதிகாரிகள், அவரைக் கைதுசெய்துள்ளனர்.



